சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களுக்கான அருணலு கணக்கிட்டு பயிற்சி வகுப்பு 2026.

 
















மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை பிரிவினால் மட்டக்களப்பின் நான்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்களுக்கான அருணலு பயிற்சி நெறியானது இன்று மண்முனை பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வளவாளர்களாக திரு க. பகிரதன் சமுர்த்தி முகாமையாளர் , திரு நா. சசிகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்ச்சி வகுப்பில் மன்முனைப் பற்று, மண்முனை தென் எருவில்பற்று, போரதீவுப் பற்று, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் இதில் பங்குபற்றி கணக்கிட்டு பயிற்சி நெறியின் பூரண அறிவினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.