வாகனேரி ஸ்ரீ பதிரகாளி அம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு!!!
















(ஆர்.நிரோசன்)
 வாகனேரி அருள்மிகு ஸ்ரீ பத்பதிரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, எண்ணைக்காப்பு நிகழ்வு (16) வியாழன் காலை 7.00 மணியளவில்  மகா கும்பாபிஷேகமும் ஒரே நாளில் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

 அதிகாலை முதலே விசேட பூஜைகள், யாகசாலை வழிபாடுகள் மற்றும் வேத மந்திர ஓதல்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து, பிள்ளையாருக்கு எண்ணைக்காப்பு நிகழ்வு நடைபெற்றதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட சுப முகூர்த்தத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.


 கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து விசேட தீபாராதனை, அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கான பிரசாத விநியோகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .