யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் (17) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தினுள் பிரவேசித்தனர்.
ஜெயா
வேல்சாமி தலைமையிலான 128 அடியார்களும் கடந்த 25 ஆம் திகதி செல்வச்
சந்நிதியிலிருந்து ஆரம்பித்து 21 நாட்களாக வட மாகாணத்தில் இருந்து
கிழக்கு மாகாணத்தில் பிரவேசித்து நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காலடி
எடுத்து வைத்துள்ளனர்.
நேற்று
முன்தினம் திருகோணமலை மட்டக்களப்பு எல்லையில் உள்ள வெருகல் சித்திர
வேலாயுத சுவாமி ஆலயத்தில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)








