யோஷித ராஜபக்ஷ தற்பொழுது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தற்பொழுது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, அவர் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.