மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(07) ஞாயிற்றுக்கிழழை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள திக்கோடை சுவரணையடி பிரதேசத்தில் வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று(08) திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





