சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பதின்ம வயது (Teenagers) பயனாளர்களுக்காக புதிய பெற்றோர் கண்காணிப்பு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 


இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெசேஞ்சர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பதின்ம வயது (Teenagers) பயனாளர்களுக்காக புதிய பெற்றோர் கண்காணிப்பு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எத்தகைய உள்ளடக்கங்கள் (Content) அதிகம் காட்டப்படுகின்றன என்பதைப் பெற்றோர்கள் இனி அறிய முடியும்.

குறிப்பாக விளையாட்டு, புகைப்படம் எடுத்தல் அல்லது கலை போன்ற பொதுவான தலைப்புகளில் எவற்றிற்கு பிள்ளைகள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் பார்க்க முடியும்.

பெற்றோர்கள் பொதுவான தலைப்புகளை மட்டுமே பார்க்க முடியும்.

மாறாக, பிள்ளைகள் தேடும் தேடல்கள், அவர்கள் பார்க்கும் குறிப்பிட்ட பதிவுகள் அல்லது மெசேஜ்களைப் பெற்றோர்களால் பார்க்க முடியாது என மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசேஞ்சர் மற்றும் மெட்டா ஹொரைசன் ஆகிய அனைத்து தளங்களுக்குமான கண்காணிப்பு வசதிகளும் இனி 'பேமிலி சென்டர்' (Family Center) என்ற ஒரே இடத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனியாகக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தேவையில்லை.

ஒரே ஒரு அழைப்பின் மூலம் அனைத்து மெட்டா செயலிகளுக்கும் சேர்த்து பெற்றோர் கண்காணிப்பைச் செயல்படுத்த முடியும்.

அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்தும் பதின்ம வயதினரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

இது இணையப் பாதுகாப்பு குறித்த பெற்றோர்களின் விழிப்புணர்வைக் காட்டுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.