இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்த்தினால் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு

 









காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், அட்டாளச்சேனை ஆகிய பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியருக்கான கருத்தரங்கு
இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் 11.05.2026 ஞாயிற்றுக்கிழமை, காவை 830. மணிக்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு ஜி. அருணன் அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதேசசெயலாளர் நிர்வாக உத்தியோகத்தர் திரு து. கமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி அவர்களினால் அறநெறிப்பாடசாலையின் பாடத்திட்டம், நோக்கம் எதிர்கால நடவடிக்கைகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பொறுப்புக்கள் கடமைகள் ஆக்கத்திறன் போட்டிகள், குருபூசை நிகழ்வுகள், புதிய மாணவர்களை அறநெறிக்கல்விக்கு இணைத்தல், எதிர்கால நடவடிக்கைகள்,ஆசிரியருக்கான நூலகக்கொடுப்பனவு, ஆசிரியருக்கான சீருடை கொடுப்பணவு, பாடசாலை தளபாடக் கொடுப்பனவு, கட்டிடக்கொடுப்பனவு, பண்ணிசை, யோகாசன வகுப்புக்கள் தொடர்பான விடயங்களை விளக்கினார் , 
அதனைத்தொடந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வளவாளர் திரு யோ. கஜேந்திரா அவர்களினால் அறநெறிப்பாடசாலைகளை நடத்தும் போது பின்பற்றவேண்டிய கற்பித்தல் நுட்பங்கள், விளையாட்டுக்கள், ஆக்கத்திறன் போட்டி நிகழ்வு தொடர்பான விளக்கம், மாணவர்களின் பங்குபற்றல் தனிநிகழ்வு, குழுநிகழ்வு தனித்துவத்தன்மை தொடர்பாக கருத்துரை வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு கல்முனை வடக்கு, நாவிதன்வெளி அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகளை காரைதீவு இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி ச. சிவலோஜினி, சம்மாந்துறை பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி உ. கௌசல்யவாணி, நிந்தவூர் பிரதேசசெயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி பா. சுஜிவனி வளவாளர் திரு நா. சனாதனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.