மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

 


மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14.05.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரிய வருகையில், 

மட்டக்களப்பு - மொறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பத்மராஜா டினேஸ் என்பவர், மற்றொருவருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

 இந்நிலையில், இன்று (14) காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை சிறைச்சாலைக்கு வெளியே இடம்பெற்ற கட்டுமானப்பணியில் மேசனாக பணியமர்த்தியிருந்தனர்.

அப்போது அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.