வரதன்
கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பாரிய
அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்க அமைய
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதன்
ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் 345 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் இரண்டாவது பெரிய வாசிக சாலையின்
நிர்மாண பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து தற்போது சுற்றுப்புற வளாகத்தை
சுத்தப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது
புதிய அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது
பெரிய வாசியசாலை கொண்ட இந்த கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பிற்கான
சுற்றுப்புற மதில் அமைத்தல் நீர் தடாக பூந்தோட்ட பணிகள் சிலைகள் நிறுவுதல்
பூச்சு வேலைகள் சுற்றாடல் துப்புரவு பணிகள் மட்டு மானசபையின் பிரதி
முதல்வர் s.டினேஷ் தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
முன்னெடுக்கப்பட்டு
வரும் இறுதி கட்ட பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்
பாக்கியநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்










