ஈரானில் குண்டுவெடிப்பில் 14 புரட்சிகர காவலர்கள் உயிரிழந்துள்ளனர்

 


ஈரானின் வடமேற்கில் உள்ள ஜன்ஜான் மாகாணத்தில், சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போது ஏவப்பட்ட வெடிக்காத குண்டுத் துண்டுகள் ஒரு துப்புரவு நடவடிக்கையின் போது வெடித்ததில், இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையைச் (ஐ.ஆர்.ஜி.சி.) சேர்ந்த பதினான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜன்ஜான் ஐ.ஆர்.ஜி.சி. வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை(01) அன்று நிகழ்ந்தது, இதில் இருவர் காயமடைந்தனர். 

 படையின் குழுக்கள், விவசாய நிலங்கள் உட்பட 1,200 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவை மாசுபடுத்தியிருந்த கொத்துக் குண்டுகள் மற்றும் அதுபோன்ற வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து கொண்டிருந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.