மட்டக்களப்பு கல்லடி உப்போடை , நொச்சிமுனை ஸ்ரீசித்தி விநாயகர் , ஸ்ரீ பேச்சி அம்மன் மற்றும் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பஜனை குழுவுக்கு வாத்திய கருவிகள் அன்பளிப்பு செய்தல் .

 


 




























 மட்டக்களப்பு கல்லடி உப்போடை'' இரதிபதி'' அமரர்  வீரக்குட்டி கணேசமூர்த்தி அன்னாரின் உபயத்தில்  கல்லடி உப்போடை- நொச்சிமுனை  ஸ்ரீசித்தி விநாயகர் , ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பஜனை குழுவுக்கு வாத்திய கருவிகள் வெள்ளிக்கிழமை 2026.04.24-மாலை ஸ்ரீசித்தி விநாயகர்  ஆலய சன்னிதானத்தில்   அன்பளிப்பு செய்யப்பட்டன.  
மேற்குறிப்பிட்ட  ஆலயங்களின் பொது முகாமையாளர். க குருநாதன்  அவர்களால் ஆலயங்களின் பஜனை குழுவுக்கு  பொறுப்பான க. ஜேகேஸ்வரன் அவர்களிடம்  வாத்திய கருவிகளை  வழங்கி வைத்தார் .
இவ் நிகழ்வின் போது முன்னாள் முகாமையாளர் ந . ஹரிதாஸ் , ஆலயங்களின் தலைவர் க .   கருணேஸ்வரன் , செயலாளர். சூ சுபேந்திரன்,                                      சி. அரியரெத்தினம் ,  வீ . விக்னேஸ்வரமூர்த்தி ,  அ.செந்தூரன், பூசகர்  மற்றும்    பஜனையில் பங்கேற்றுவரும் சிறுவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் .
   ஆலயத்தில் பஜனை செய்வது என்பது இறைவனை ஒருமித்த மனதுடன் கூடி வழிபடும் கூட்டுப் பிரார்த்தனை முறையாகும். 
இதனால்     மன ஒருமைப்பாடு: இசையுடனும் தாளத்துடனும் பாடப்படும் பாடல்கள் சிதறிக்கிடக்கும் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றன.
    கூட்டு சக்தி: பலரும் இணைந்து ஒரே மந்திரத்தையோ அல்லது பாடலையோ பாடும்போது அங்கு நேர்மறை அதிர்வுகள் (Positive Vibrations) உருவாகின்றன. இது தனிப்பட்ட வழிபாட்டை விட அதிக வலிமை கொண்டதாகக் கருதப்படுகிறது.
    பக்தி மார்க்கம்: நவகிரகங்களின் வழிபாட்டில் 'சங்கீர்த்தனம்' அல்லது பஜனை என்பது இறைவனை அடைய எளிய வழியாகச் சொல்லப்படுகிறது. இது பக்தியை வளர்க்கவும், ஆணவத்தை அடக்கவும் உதவுகிறது.
    மன நிம்மதி: கூட்டு வழிபாட்டின் போது எழும் ஓசை மற்றும் இசை, மூளையில் உள்ள பதற்றத்தைக் குறைத்து மன அமைதியைத் தருகிறது      என்பது குறிப்பிடத்தக்கது .