,
வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பினரின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா – 2026 முன்னெடுக்கப்பட்டது
உதவும்
கரங்கள் அமைப்பின் தலைவரும்,மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி
சிரேஷ்ட விரிவுரையாளருமான ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர், ,திருமதி. சரோஜினி மகேஸ்வரநாதன் பிரதம
அதிதியாகவும் ,
சிறப்பு அதிதிகளாக
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்திக்கான உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் மற்றும் பதவி நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிழக்குப் பல்கலைக்கழகம்.அரிமா. ஏ. பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டார்கள் .
கௌரவ அதிதிகளாக
திரு. ந. லோகேந்திரன் - ஓய்வுநிலை விரிவுரையாளர்,
திரு. க. சிறிதரன் - ஓய்வுநிலை அதிபர் ஆகியோரும்
விசேட அதிதிகளாக
திரு. ச. பிறேமானந்தன் - ஓய்வுநிலை ஆசிரியர்
உப தலைவர், ஆலய பரிபாலன சபை, கல்லடி,
திரு. சா. புண்ணிய மூர்த்தி - ஓய்வுநிலை ஆசிரியர்
சிரேஸ்ட மொழிபெயர்ப்பாளர் ஆகியோரும்
அழைப்பு அதிதிகளாக
கே. எஸ். ஆர். சிவகுமார் - கலாசார உத்தியோகத்தர், ஏறாவூர்ப்பற்று ,
கொம்புப் பிள்ளையார் ஆலய தலைவர், திரு. வி. ரவிக்குமார் - ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் வெகுசிறப்பாக ஆரம்பமானது .
தொடர்ந்து மாணவர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை சிறார்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.


































































































