சாகரிக்கா ரயில் தடம் புரண்டது .

 


பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.

வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தடம்புரண்டுள்ள சாகரிகா கடுகதி ரயிலை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.