மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நபரொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 


மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நபரொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (19.04.2026) இடம்பெற்றுள்ளது. 

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டத்தில் விவசாயியான 68 வயதுடைய காசிநான் ஜெயகாந் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.