டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பட்டங்களை கையளிக்கும் நிகழ்வு

 


நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஆரம்ப (PSM) மற்றும் இடை மருத்துவத் (Paramedical) துறைகளில் 952 ஊழியர்களுக்கு டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா பட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.

இந்தப் பட்டமளிப்பு விழா இரண்டு முக்கிய அமர்வுகளைக் கொண்டிருந்ததுடன், முதல் அமர்வு பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் (PHM) மற்றும் பொதுச் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்காக (PHFO) மற்றும் டிப்ளோமா பூர்த்தி வழங்கும் வைபவம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கரங்களால் கையளிக்கப்பட்டன. அதன்படி, குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் (PHM) 449, பொதுச் சுகாதார துறை அதிகாரிகள் (PHFO) 77 என 526 உத்தியோகத்தர்களுக்கு டிப்ளோமா பட்டம் கையளிக்கப்பட்டது.

இரண்டாவது அமர்வின் போது பாடசாலை மருத்துவ சிகிச்சை சேவைகள் (School Dental Services – SDT), மருந்தாளர் (Pharmacy) மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (Public Health Inspector – PHI) என்ற துறைமுகங்களுக்காக உயர் டிப்ளோமா (Higher Diploma) பூர்த்தி செய்‌‌‌தவர்களுக்கு அமைச்சரின் கரங்களால் வழங்கப்பட்டதுடன், அதன்படி, பாடசாலை பல் மருத்துவர் சேவை உத்தியோகத்தர்கள் (SDT) 39, மருந்தாளர்கள் (Pharmacy) 149, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) 238 என மொத்தமாக 426 பணியாளர்களுக்கு உயர டிப்ளோமா பட்டங்களும் வழங்கப்பட்டன.

டிப்ளோமா பட்டம் கையளிப்பின் போது பட்டதாரிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ; நாட்டின் சுகாதார சேவையில் சவால் மிக்க எதிர்கால பயணத்தில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்றார். அந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக திறமையான மற்றும் அர்ப்பணிப்பு உடைய சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை சுகாதார சேவைக்காக அத்தியாவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர் சுகாதாரம் உட்பட பல துறைகளில் இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் மற்றும் சர்வதேச புகழை தொடர்ந்தும் முன்னெடுப்பதே இந்த புதிய பணியாளர்களின் பொறுப்பு என்றும், தொழில் முன்னேற்றம் நாட்டின் எதிர்கால சுகாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு பாரிய சக்தியாகும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.