போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 சந்தேக நபர்கள் கைது .

 

 


போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு வெவ்வேறு சோதனைகளின் போது 7 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது போலி நாணயத்தாள்களுடன் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில்இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் சோதனையின் போது,6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 91 கிராம் 200 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.