மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மூன்றாம் வருட முதலாம் அரையாண்டு கட்புல மற்றும் தொழில் நுட்பத்துறை மாணவர்களின் குழு(2 ) கண்காட்சி .
அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் கட்புல மற்றும் தொழில் நுட்பத்துறை தலைவர் கலாநிதி பிரகாஷ் கண்காட்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது .
மேற்படி மாணவர்களின் ஓவிய சிற்ப பல்லூடக கலையாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது .
கண்காட்சியானது கட்புல மற்றும் தொழில் நுட்பத்துறை விரிவுரையாளர் அருள் சஞ்சித் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

























































