காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுக்கிய பாரிய மர்ம பொருள் கப்பலின் பொருளாக இருக்கலாம் என சந்தேகம் ! கடற்படையினர் விசாரணை







மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழக கோன் தெரிவித்தார்.

நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது சுமார் 25 அடி நீளமும்,4 ஆடி உயரமும் கொண்ட இம் மர்மப்பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.

கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் அங்கு கூடி வருகின்றனர்