கல்முனை
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில், சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கான
கௌரவிப்பு நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர்
அருட்.சகோ.ச.இ.ரெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று (11) புதன்கிழமை
வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் பி.பற்குணன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட மாணவர் தலைவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சின்னம் சூட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.
( வி.ரி.சகாதேவராஜா)







