தற்போதைக்கு நீர்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது .

 


நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் பதற்ற நிலைக் காரணமாக எரிப்பொருள் கட்டணங்கள், உணவு பொருட்கள் விலைகள் மற்றும் எரிவாயு கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அடுத்த நீர் கட்டண திருத்தம் ஜூன் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.