மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம் இதற்கான
நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (13) முற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.
நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.