மத்திய கிழக்கில் தொடரும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போர் (Iran War) தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்து கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
"ஈரான், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகவும், எந்த அச்சுறுத்தலும் இன்றியும் திறக்காவிட்டால், இன்னும் 48 மணி நேரத்திற்குள் , அமெரிக்கா ஈரானின் பல்வேறு மின் நிலையங்களை தாக்கி அழிக்கும்.
மிகப்பெரிய மின் நிலையத்திலிருந்து தொடங்கி!" என குறிப்பிட்டுள்ளார்.
"இந்த அச்சுறுத்தல், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி வைத்திருப்பதால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்து, ஏற்றுமதி கப்பல்கள் தடைபடுவதால் ஏற்பட்டுள்ளது.





