இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நாடு முழுவதும் சீராகப்
பரவச் செய்யும் நோக்கில், உள்நாட்டு வான் போக்குவரத்துத் துறையை மீண்டும்
வலுப்படுத்த இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான புதிய முதலீட்டுத் திட்டங்கள் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளன
இந்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் புதிய வானூர்தி சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த
ஆண்டு 2.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், 2026-ஆம்
ஆண்டிற்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டும் இலக்கை அடைய,
இத்தகைய அதிவேகப் போக்குவரத்து வசதிகள் அவசியம் என அரசு கருதுவதாக தகவல்
வெளியாகியுள்ளது.





