இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா.

 














காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் "புதிய விழுகளின் புகுமுக விழா"  இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது .

பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  புதியமாணவர்களை பழைய மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றார்கள்.

பிரதம அதிதியாக ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார் .

கௌரவ அதிதிகளாக ஆசிரியைகளான நிலந்தினி ரம்யா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

பெற்றோர் சார்பில் ஆசிரியர் பி .கேதீஸின் சிறப்புரை வழங்க டாக்டர் பிரசன்னா நன்றியுரையாற்றினார் .
 
 
( காரைதீவு சகா)