பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்.








பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2026.01.02ஆந் திகதி பாலமுனை ஹிக்மா பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. 

இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர்  சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர். 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகத்தினர் ஐந்து (05) ஓவர்களில் நிறைவில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 28ஓட்டங்களை பெற்றனர். 

எதிர்த்தாடிய மார்க்ஸ்மேன்அணியினர் 05 ஓவர்கள் நிறைவில் இரண்டு(02) விக்கட்டுக்களை இழந்து 33ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டனர். 

இச்சுற்றுத்தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும்,இறுதி போட்டியின் ஆட்டநாயகனாகவும் மார்க்ஸ்மென் விளையாட்டுக்கழகத்தன் வீரர் நஜா, தொடர் ஆட்ட நாயகனாக ஓர்கிட் விளையாட்டுக்கழக வீரர் சம்ரி தனதாகிக்கொன்டார்

இச்சுற்றுப் போட்டியில் 
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மார்க்ஸ்மேன் அணியினருக்கு 30ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட சுப்பர் ஓர்கிட் அணியினருக்கு 20ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

குறித்த சுற்றுப்போட்டியில் அதிதிகளாக பாலமுனை விளையாட்டு அகடமியின் தலைவர் ஐ.எல்.பாயிஸ்,பாலமுனை 02ம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் முனாஸ்,பாலமுனை ஹிதாயா வித்தியாலத்தின் அதிபர் முஜாஹித்தின்,பொறியியலாளர்  நௌஸாத் மற்றும் பாலமுனை பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக்கழகத்தின் தலைவர்கள்,நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . 

நிகழ்வுக்கான அனுசரனையினை விளையாட்டுக்கழகத்தின் நிருவாகத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
-வாஜித் அஸ்மல்-