டிட்வா சூறாவளியால், பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு திட்டத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு அநுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில்
கல்நேவ, ஹந்துங்கம, இராஜாங்கனை - சிறிமாபுர ஆகிய பிரதேசங்களிலும் குருநாகல்
மாவட்டத்தில் நிக்கவெரட்டிய , விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம -
தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
"டிட்வா" சூறாவளி அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் கொள்கைத்
திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.





