மட்டக்களப்பு தாழங்குடாவில் சமுர்த்தி சுவபோஜன் திறப்பு விழா.






































சமுர்த்தி சந்தைப்படுத்தல்- 2025 ம் ஆண்டு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி நலனுதவி பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வறுமை நிலையை உயர்த்தும் நோக்குடன் சமுர்த்தி 'சுவபோஜன்’ தொழில் முனைவோர் (பெண்கள்) 10 பேர் கொண்ட விற்பனை நிலையத்தை அமைப்பதற்காக சமுர்த்தி திணைக்களத்தினால் ரூ 1000000 நிதி கிடைக்கப் பெற்றது. 

இதனடிப்படையில் 2026.01.26  (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தாழங்குடா சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி வளாகத்தில் அமைந்துள்ள சுவபோஜன் விற்பனை நிலைய திறப்பு விழா நிகழ்வு மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திரு. கி. இளம்குமுதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுது.

இந்நிகழ்ழ்வில் கெளாரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புகுழு தலைவருமான திரு. கந்தசாமி பிரபு அவர்ளும், மண்முனைப்பற்று தவிசாளர் கௌரவ. பா. செந்தில்குமார் அவர்களும், மாவட்ட சமுத்தி பணிப்பாளர் திரு. S. ராஜ்பாபு அவர்களும், மாவட்ட சமூர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் திரு M. பஸீர் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் திரு.A.மோகனகுமார் அவர்களும், நிருவாக உத்தியோகத்தர் திரு. தவேந்திரன்  அவர்களும்,சமுர்த்தி தலமையக முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், கருத்திட்ட உதவியாளர், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சழுதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.