கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக தடைப்பட்டு இருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சைகளின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் தெரிவு செய்யப்பட்ட பரிட்சை நிலையங்களில் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வளையங்களிலும் இன்று காலை மனை பொருளியல் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான பரிட்சைகள் இன்று இடம் பெற்றது
அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைய அடை மழையினால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு தேவையான முன் ஆயத்தப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரிச்சாத்திகளை நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தருமாறு வலைய கல்வி அலுவலகம் பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரதன்

.jpeg)



.jpeg)





