மகாத்மா காந்தியின் 79 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
















உலகுக்கு அஹிம்சையை போதித்த இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும்  மகாத்மா காந்தியின்  79-வது நினைவு நாள் . மட்டக்களப்பில்   மலர் தூவி மரியாதை.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில்
அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் 2026.01.30- ம்   திகதி வெள்ளிக் கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.