மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழா நிகழ்வானது 2026.01.27 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் (பதில் கடமை) திரு உ. உதய ஸ்ரீறிதர் ஆவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
செல்வாநகர் சிவன் ஆலயத்தில் இருந்து பாற்குட பவணியுடன் கதிர் எடுத்துவரப்பட்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் கதிர்களுக்கு பூசைசெய்து கதிர் சூடடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு கி. இளங்குமுதன், கணக்காளர் திரு அ. மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் திரு வே.தவேந்திரன் ஆகியோருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ஒருபுறம் சங்காபிஷேக நிகழ்வுகளும் மறுபுறம் ஒவ்வோரு கிளைகளும் வெவ்வேறு வகையான பொங்கல் பானை வைத்தல் நிகழ்வுகளும் இடம்.பெற்று பிரதேச செயலகம் விழாக்கோலம் பூண்டது.
இதன்போது உத்தியோகத்தர்களின் பாடல்களும் இடம்பெற்றன.
தொடர்ந்து சங்காபிஷேக பூசை மற்றும் தைப்பொங்கல் பூசைகள் இடம்பெற்று நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது.



.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)



.jpeg)



.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)



.jpeg)










