மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிலையில் வெள்ளத்தால் செட்டிப்பாளையம் வடக்கு மற்றும் மகிளுர் ஆகிய கிராம அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இரண்டு இலட்சம் நிதி உதவி மூலமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் நிதி உதவி மூலமும் 100 குடும்பங்களுக்கு இரண்டாயிரத்து இருநூற்றி ஐம்பது ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் மற்றும் பேரவை உறுப்பினர்களான எஸ்.ரெட்ணம், எஸ்.சசிகுமார், எஸ்.பவிதரன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)






