சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் நாளை பிறக்க உள்ள புத்தாண்டை வரவேற்க தயாராகும் மட்டக்களப்பு மக்கள் .

 


 



சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் நாளை பிறக்க உள்ள புத்தாண்டுக்காக கிழக்கு மாகாண மக்கள் தயாராகி வருவதை காணக் கூடியதாக உள்ளது 

இயற்கை அனர்த்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக  நாளை பிறக்க  உள்ள புத்தாண்டு பிறப்பின் போது  கிழக்கு மாகாணத்தில்  எளிமையான முறையில் அமைதியாக பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி  வழிபாடுகளில் ஈடுபட உள்ளமை குறிப்பிடத்தக்கது

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான  புது வருட பிறப்பு ஆராதனை  புளியந்தீவு தீவு மரியாள் தேவாலயத்தில் மட்டு மறை மாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெற உள்ளது

 இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது

 இதேவேளை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக புத்தாண்டை பிறப்பை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

 வரதன்