இயேசு பாலன் பிறப்பு ஆரையம்பதி குழந்தை தெரேசம்மாள் ஆலயத்திலும் இடம்பெற்றது!







மீட்பராம் இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் உலகமெங்கிலும் உள்ள மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நத்தார் பண்டிகையானது கிறிஸ்தவ மக்களால் மட்டுமன்றி அனைத்து மக்களாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும்.

பாவ இருளிலும் அடிமைத்தனத்திலும் அகப்பட்டிருந்த மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக இறைவன் மனிதனாக இந்த மண்ணில் அவதரித்த திருநாள் இது.

இயேசு மண்ணில் பிறந்து உலகிற்கு தந்த அமைதி நமது மனங்களிலும் குடி கொள்ளட்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.