
மட்டக்களப்பு கல்லடி பொமிங்ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா -20025. கல்லடி உப்போடை துளசி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு அரங்கிற்கு வரவேற்கப்பட்டனர் ..மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம் பாடசாலை கீதம் ஆகிய தமிழ் பாரம்பரிய நிகழ்வுகள் இடம் பெற்றன.
பிரதம அதிதிகளாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்சயன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.T.மேகராஜ் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய வெளிக்கள உத்தியோகத்தர் S.பரணீதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
பாடசாலைச் சிறார்களின் ஆடல், பாடல் , பேச்சு, கவிதை , சிங்கள மொழிப்பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் பார்ப்போரை மேன் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
சிறார்களை நெறிப்படுத்திய முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் .
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்பள்ளி சிறார்கள் அனைவருக்கும் அதிதிகளால் பரிசுப்பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள்.
மேலும் பொமிங்ரன் பாலர் பாடசாலையில் கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை சிறார்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள், பிரதேசவாழ் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டனர்.
EDITOR






































































