மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஒளி விழா - 2025


 
























வருடாந்தம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குசெய்து நடாத்தப்படும்  ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமை மற்றும் வழிக்காட்டுதலின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்   (23.12.2025) மிகச் சிறப்பான முறையில் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்டது.

அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை  தொடர்ந்து பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய  பங்குத் தந்தை Rev. Fr அன்றன் ரெறன்ஸ்  அவர்களின்  ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மேலும் கோட்டைக்கல்லாறு இலங்கை பணிப்பாளர் கிறிஸ்தவ சபையின் அருட்தந்தை Rev. Pastor அ. நிரஞ்சன் அவர்களினால் ஒளி  விழா தொடர்பான விசேட உரை நிகழ்த்தப்பட்டது. 

 இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கணக்காய்வு அலுவலக கணக்காய்வு அத்தியட்சகர் திரு. ரொபட் அலோசியஸ் அவர்கள் கலந்து  சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

இதன் போது அலுவலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை மற்றும்  அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக  உத்தியோகத்தர்கள், பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.