மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்ட மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் .

 


அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை இன்று முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை பாதுகாப்பான தற்காலிக மையங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. 

இந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. 

 அதன்படி, கண்டி மாவட்டத்தில், ஹத்தரலியத்த, யடிநுவர, உடுதும்பர, பாதஹேவாஹேட்ட, மெததும்பர, பஸ்பாகேகோரளை, தெல்தோட்ட, பூஜாபிட்டிய, கங்கஇஹல கோரளை, பன்வில, கங்கவட்ட கோரளை, உடபலாத்த, ஹாரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொழுவ, தும்பனே, அக்குரணை, உடுநுவர மற்றும் பாததும்பர. 

கேகாலை மாவட்டத்தில்  கேகாலை, கலிகமுவ, மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, யட்டியாந்தோட்ட, ரம்புக்கனை, வரகாபொல. 

குருநாகல் மாவட்டத்தில்  மாவத்தகம, மல்லவப்பிட்டிய, ரிதிகம. 

மாத்தளை மாவட்டத்தில்  நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்ககோரளை, லக்கல, பல்லேகம, உக்குவெல, இரத்தோட்ட, மாத்தளை மற்றும் யடவத்த ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.