தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது.

 


தற்போதைய நிலவரப்படி, நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும், 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அத்துடன் 1,441 பாதுகாப்பு தங்குமிடங்களில், 64,483 குடும்பங்களைச் சேர்ந்த 233,015 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.