சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 


நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை, குருநாகல், இரத்தினபுரி, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற அதி அபாய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. 

 அத்துடன், பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 அதேநேரம், கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.