டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. திகதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

 


பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான திகதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என  கிழக்கு செய்திகள்அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். 
 
தற்போதுள்ள முடிவின்படி, டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 
 
எனினும், நாட்டின் நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு, பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால், அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.