இலங்கை தமிழரான வாகீசன் மதியாபரணம் கனடாவில் மிக உயரிய இராணுவ விருது பெற்று வரலாறு படைத்துள்ளார் .

 


இலங்கைத் தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார்.


கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், இலங்கை இராணுவ வீரர் வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. 


அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார்.


விருதைப் பெற்ற பின்னர் குறித்த வீரர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், 


இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளது. என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


அவரது சாதனை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அகதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அனைவருக்கும், ஊக்கம் அளிக்கும் பெருமைமிகு வரலாறு  எனப் பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.