மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர்.

 



பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் மற்றும் உப பீடாதிபதிகளுடனும் ஆசிரிய மாணவர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார் .

கல்லூரியின் பௌதீக வள வசதிகளை நேரடியாக பார்வையிட்டார்.

இதன்போது பீடாதிபதி கணேசரெத்தினம் கல்லூரியின் குறை நிறைகள் தொடர்பாக பிரதமருக்கு தெளிவுப்படுத்தினார்.

வி.ரி.சகாதேவராஜா