பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் மற்றும் உப பீடாதிபதிகளுடனும் ஆசிரிய மாணவர்களுடனும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார் .
கல்லூரியின் பௌதீக வள வசதிகளை நேரடியாக பார்வையிட்டார்.
இதன்போது பீடாதிபதி கணேசரெத்தினம் கல்லூரியின் குறை நிறைகள் தொடர்பாக பிரதமருக்கு தெளிவுப்படுத்தினார்.





