மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்-- அமைச்சர் பிமல் ரத்நாயக்க

 


மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 
 
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் அந்த தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 
 
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது. 
 
நாங்கள் நிச்சயமாக தேர்தலை நடத்துவோம் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.