மட்டக்களப்பு மாநகர சபையும் மட்டிக்கழி பொது நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வு -2025







 





























































மட்டக்களப்பு  மட்டிக்கழி வாசிகசாலையின் வாசகர்  வட்டத் தலைவர் சிங்கராஜா விநோதன் மற்றும் மட்டிக்களி நூலகப் பொறுப்பாளர் தலைமையில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதிகளாக 
கௌரவ மாநகர முதல்வர்  சிவம் பாக்கிநாதன்  , மாநகர ஆணையாளர் நா .தனஞ்ஜயன்  கலந்து சிறப்பித்தார்கள் .


கௌரவ  அதிதிகளாக  கௌரவ பிரதி முதல்வர்    வை . தினேஷ்குமார் ,  நூலக குழுத்தலைவர் து .மதன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் க.அருணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .


சிறப்பு அதிதிகளாக பிரதி ஆணையாளர் வ . தேவநேசன் ,  மாநகரசபை பொறியியலாளர் வீ.நதீசன் ,  பிரதம கணக்காளர் க. அரசரெத்தினம் , பொது நூலக நூலகர் T. சிவராணி,    சனசமூக உத்தியோகத்தர் க. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று இருந்தார்கள் .


அழைப்பு அதிதிகளாக  ஆதித்தி கைத்தறி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன் ,    மட்டிக்கழி  கிராம அபிவிருத்தி சங்க தலைவர்    S. கிருபாகரன் ,  மட்டிக்கழி  ஸ்ரீ   திரௌபதா  அம்மன் ஆலய செயலாளர் க.முகுந்தன் ,    மட்டிக்கழி கதிரொளி விளையாட்டுக்கழக தலைவர் M.திவாகரன் கலந்து சிறப்பித்தார்கள் .
மேலும் நூலக குழு உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர் 
ஆரம்ப நிகழ்வாக   அதிதிகளுக்கு     மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்புரை , வரவேற்பு நடனம் ,தலைமை உரை  ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து மாணவர்களின்   கலாச்சார நடனங்கள் , பேச்சு என்பன இடம் பெற்றதோடு நூல் வெளியீடும் இடம் பெற்றது .
 போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப் பட்டது.
 அமிர்தகளி, மட்டிக்களி, பாலமீன்மடு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் நலம் விரும்பிகள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் 
நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது .

EDITOR