ஒரு நாள் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவிக்கு மரக் குச்சியால் தண்டித்த அதிபர் .

 


ஆனமடுவ, கெதேத்தேவ பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 2 ஆம் ஆண்டு மாணவியை அதிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 
 
ஒரு நாள் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவிக்கு மரக் குச்சியால் அதிபர் தண்டித்துள்ளதாக அறியமுடிகிறது. 
 
அதன்படி, தாக்குதல் நடத்திய அதிபர் குறித்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். 
 
இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர் கெதேத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியாவார். 
 
இந்தச் சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமி, முந்தைய நாள் பாடசாலைக்கு செல்லாததால் கோபமடைந்த அதிபர், அருகில் இருந்த மரக் குச்சியை எடுத்து பலமுறை தாக்கியதாகக் கூறி அவரது பெற்றோர், ஆனமடுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.