பிரதமர் ஹரிணி அமரசூரிய மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ளார்.

 


இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள நிலையில், இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 
 
பிரதமர் ஹரிணி அமரசூரிய மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ளார். 
 
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்தார். 
 
பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு உறவுகள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஹரிணி அமரசூரிய மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். 
 
இந்தப் பயணத்தின் போது அவர் முக்கிய இந்தியத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.