ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச
.உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் தரம் 10,11, மற்றும் உயர்தர மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியினை நடாத்தியது.
"உலக மனநல கூட்டமைப்பின் அவசியம்"
எனும் தலைப்பில் நடாத்திய கட்டுரைப் போட்டியில், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட (கிழக்கு மாகாணம்) அன்னமலை நாவிதன்வெளி, கமு/சது/கலைமகள் மகா வித்தியாலயம் வேம்படி பாடசாலையில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவி செல்வி. பாஸ்கரன் மோஷிணி 1ஆம் இடம் ,வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட, யா/விக்டோரியாக் கல்லூரியில் தரம் 13 கணிதப் பிரிவில் கல்வி பயிலும் மாணவன் செல்வன். சோமலோஜன் திலக்ஷன் 2ஆம் இடம், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட, மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி செல்வி. சிவகுமார் சரேஸ்மிதா 3ஆம் இடத்தையும் பெற்றிருந்தனர்.
3ஆம் இடத்தினைப் பெற்ற மாணவியை பாராட்டி கௌரவிப்பதற்காக MIU பல்கலைக்கழக குழாமினர் இன்று(17) மட்/ விவேகானந்தா மகளிர் கல்லூரி கல்லடி உப்போடை பாடசாலைகளுக்குக்கு சென்றிருந்தனர்.
இதன்போது பாடசாலையின் அதிபர் திரு. K. சரவணபவன் அவர்களினால் பல்கலைக்கழக குழாமினர் வரவேற்கப்பட்டதுடன் அதிபரின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கௌரவிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், MS. F. தேவரஞ்சினி மற்றும் கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு.ABM. மர்வான் ஆகியோரால் வெற்றி பெற்ற மாணகளுக்கு மாலை அணிவித்து உளவியல் விருதும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன் MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை மாணவர்களின் பங்களிப்பு மூலம் இம்மாணவியின் கற்றல் செயற்பாட்டிற்கு சிறிய பணத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட. விரிவுரையாளர், S. பிரான்சிஸ் மற்றும் பல்கலைக்கழக உளவியல்துறை மாணவர்கள் உட்பட மேற்படி பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
MIU பல்கலைக்கழக குழாமினர் பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து வருவதால் 1ஆம்,2ஆம் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் பாடசாலையில் வைத்து மிக விரைவில் அவர்கள் கௌரவிக்கப்பட இருப்பதாகவும் இன்றைய நிழ்வின் போது மேலும் அறியக்கிடைத்துள்ளது.