ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற பஹ்ரைன் செல்லும் சிவானந்தா மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்தார்

 

 

 



  

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய  மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்திய கிழக்கு  பஹ்ரைன் நாட்டின்  தலைப்பட்டினம் மனாமாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில்  16 வயது- 60கிலோ பிரிவுக்கு உட்பட்ட மல்யுத்தப்போட்டியில் பங்கு பற்றுவதற்காக பஹ்ரைன்   பயணமாக உள்ள நிலையில் மாவட்ட செயலகத்திற்கு  வருகை தந்த வேளை    சஞ்ஜீவன் டிருஷாந்துக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் ,அரசாங்க அதிபருமான  ஜே. எஸ். அருள்ராஜ் அவர்கள்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் .