மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , அணி உறுப்பினர்களான திருமதி நளினி அகிலேஸ்வரன் மற்றும் சுகுணமதி அருள்ராஜா ஆகியோரின் மணி விழாக் கொண்டாட்டமும் இன்று(29) புதன்கிழமை திருகோணமலை நிலாவெளியில் நடைபெற்றது.
மற்றும்
புலம் பெயர் உறுப்பினரான சுவிஸில் வாழும் திருமலை திருமதி விஜயகுமாரி
மகேஸ்வரன் 33 வருடங்களின் பின்னர் சக நண்பர்களை சந்திக்கும் நிகழ்வும்
கூடவே நடைபெற்றது.
அணித்
தலைவரும் பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் திருகோணமலை நிலாவெளி
நட்சத்திர விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு
ஆசிரியர் கலாசாலையின் 1991/92 புலன அணியின் திருகோணமலை தொடக்கம்
திருக்கோவில் வரையிலான புலன அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
( வி.ரி. சகாதேவராஜா)
.jpg)




















