மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 32 தாதிய உத்தியோகத்தர்கள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 16. 10.2025 வியாழக் கிழமையன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எஸ். தனுஷியா அவர்கள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள், புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கியிருந்தார். மேலும், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
இதற்கு அமைவாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு 20 உத்தியோகத்தர்களும் ,காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு 08 உத்தியோகத்தர்களும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு 02 உத்தியோகத்தர்களும் , கதிரவெளி பிரதேச வைத்தியசாலைக்கு 02 உத்தியோகத்தர்களும்
இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.