எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார் .

 


எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.